பைசா செலவில்லாமல் குடிநீரை சுத்தப்படுத்த எளிய வழி..!

பைசா செலவில்லாமல் குடிநீரை சுத்தப்படுத்த எளிய வழி..!

பைசா செலவில்லாமல் குடிநீரை சுத்தப்படுத்த எளிய வழி..!

குடிநீரை சுத்தம் செய்ய பியூரிபையர் போன்ற சாதனங்கள் இனி தேவையே இல்லை. வாழைப்பழத் தோல் இருந்தால் போதும்.

குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இப்படி ஒரு விந்தையான ஆராய்ச்சியை, பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோசின்சியாஸ் நிறுவனம் மேற்கொண்டது.

குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான குழு வெளியிட்ட ஆய்வு முடிவு :

இந்த ஆய்வில் அவர்கள் தெரிவித்திருப்பதாவது, சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்நிலைகளில் கலக்கும் மாசு மூலம் நீரில் காரீயம், செம்பு உள்பட பல உலோகங்களும், ரசாயனப் பொருட்களும் கலந்து நீர் குடிக்க முடியாத அளவிற்கு மாசடைந்து காணப்படுகின்றது.

இப்படி மாசடைந்த நீரைப் பருகினால், உடல் நலன் பாதிப்பு நிச்சயம். மாசடைந்த நீரை சுத்தமாக்குவதில் பியூரிபையர் உள்பட பல  சாதனங்கள் நடைமுறையில் உள்ளன. வசதிபடைத்தவர்கள், ஓரளவு சம்பாதிப்பவர்கள் மட்டுமே இதுபோன்ற  சாதனங்கள் பயன்படுத்த முடியும். ஏழைகள் இப்படி ஒரு சாதனங்களை கற்பனை செய்து பார்க்க முடியாது.

ஏற்கனவே, தேங்காய் நார் மற்றும் கடலைத் தோல் மூலம் நீரைச் சுத்தப்படுத்தும் முறை கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் சில்வர் பாத்திரங்கள் மற்றும் ஷூக் களை சுத்தப்படுத்த உதவும் வாழைப்பழத் தோலைக் கொண்டு, தண்ணீரை சுத்தப்படுத்த ஆய்வில் இறங்கினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது.

நீரில் வாழைப்பழத் தோலை நனைத்தால், அதில் உள்ள நச்சுக்கள் உடனடியாக குறைவதை ஆய்வில் கண்டோம். நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத் தோல் உறிஞ்சிவிடுகிறது. இதனால், 90 சதவிகிதம் அளவுக்கு நீர் சுத்தமாகிறது.

பல கட்டங்களாக ஆய்வு செய்தே வாழைப்பழத் தோலுக்கு இப்படி ஒரு ஆற்றல் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம். நீரைச் சுத்தப்படுத்துவதில் இம்முறை சிறப்பானது. செலவும் குறைவு. ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்ப பயன் படுத்தலாம், என ஆய்வு கூறுகிறது.
 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்