தி லாஸ்ட் கோஸ்பல் - ஏசு கிறிஸ்துவிற்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள்
தமிழ் உலகம்,
1198

அமெரிக்காவின் யார்க் பல்கலைக்கழக பேராசிரியர் பார்ரி வில்சன் மற்றும் ஆவண தொகுப்பாளர் சிம்சா ஜேக்கோபோவிசி ஆகியோர் இணைந்து (The Lost Gospel).'தி லாஸ்ட் கோஸ்பல்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளனர்.
இந்தப் புத்தகம் உலகம் எங்கும் விரைவில், விற்பனைக்கு வர உள்ளது. பழமையான பிரிட்டீஷ் நூலகத்தில் அராமெய்க் மொழியில் இருந்த ஒரு ஆவணத்தை மொழி பெயர்த்து இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதில் கிறிஸ்தவர்களால் கடவுளாக வணங்கப்படும் ஏசு கிறிஸ்துவிற்கு மனைவியும், இரு குழந்தைகளும் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மனைவி பெயர் மேரி மக்டாலேன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கிறிஸ்தவர்கள் மத்தியில் இந்த புத்தகம் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது.
இது குறித்து பிரிட்டீஷ் நூலகம் கூறுகையில், “அந்தப் புத்தகத்துக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை, அது ஆய்வாளர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது“ என்று கூறியுள்ளார்.
அந்தப் புத்தகத்தின் முதல் பக்கத்தில் உள்ள வரியில், "கத்தோலிக்க கிறிஸ்த தலைமையிடமான வாடிகன் எதற்காக பயந்துகொண்டிருந்ததோ, டாவின்சி கோட் படைப்பாளி டான் பிரவுனுக்கு எந்த சந்தேகம் வந்ததோ, அது இப்போது உண்மையாகிவிட்டது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏனெனில் டான் பிரவுன் தனது டாவின்சி கோட் புத்தகத்திலும், ஏசு திருமணமானவர் என்று தெரிவித்திருந்தார். அது உண்மையாகிவிட்டதாக 'தி லாஸ்ட் கோஸ்பல்' புத்தகத்தை எழுதியுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜெருசலத்தில் ஆய்வு நடத்தி, ஏசு கிறிஸ்து மறைந்த பிறகு கட்டிய கல்லறை அங்கு உள்ளதாக எழுத்தாளர் சிம்சா ஜேக்கோபோவிசி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஏசுவுக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்ததாகக் கூறி எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.