அப்துல்கலாம் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ராமேசுவரத்தில் குவிந்தனர்

அப்துல்கலாம் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ராமேசுவரத்தில் குவிந்தனர்

சென்னை, 

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உடலுக்கு நேற்று டெல்லி யில் இறுதிஅஞ்சலி செலுத் தப்பட்டது. பிரதமர் மோடி உள்பட ஆயிரக்கணக் கானோர் அஞ்சலி செலுத்தி னார்கள்.

இன்று காலை அப்துல் கலாம் உடல் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் மதுரை கொண்டு வரப்பட் டது.  அங்கிருந்து ஹெலி காப்டர் மூலம் ராமேசுவரம் எடுத்துச் செல்லப்பட்டது.
ராமேசுவரம் பஸ்நிலை யம் அருகே உள்ள மைதானத் தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அப்துல்கலாம் உடல் வைக்கப்படுகிறது. மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்த காலையில் இருந்தே ஏராளமானோர் இங்கு வந்து குவிந்திருந்தனர். இதையட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

 தமிழக அரசியல் தலைவர்களும் அப்துல்கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ராமேசுவரம்  செல்கின்றனர்.தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்  நேற்று மாலையே சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். அங்கு தங்கியிருந்த அவர் இன்று பிற்பகல் ராமேசுவரம் புறப்பட்டு சென்றார்.  அவ ருடன் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகளும் சென்றனர்.

தே.மு.தி.க.  தலைவர் விஜயகாந்த்,  அவரது மனைவி பிரேமலதா, தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளர் சுதீஷ் ஆகியோர் இன்று காலை 6.15 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றனர்.அங்கிருந்து ராமேசுவரம் செல்கின்றார்கள். தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளும் ராமேசுவரம் சென்றனர்.
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை விமானம் மூலம் மதுரை சென்றார். அங்கிருந்து கார் மூலம் ராமேசுவரம் செல்கிறார்.

தமிழ்நாடு  காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று காலை விமானம் மூலம் மதுரை சென்றார்.அங்கிருந்து ராமேசுவரம் சென்று அப்துல்கலாம் உடலுக்கு நேரில் செலுத்து வார். 

ம.தி.மு.க. பொதுச் செய லாளர் வைகோ நேற்று இரவு ராமேசுவரம் சென்றார். அங்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்துக்குச் சென்ற வைகோ, கலாமின் அண்ணன்  மற்றும்  பேரன் சேக் சலீம்,  அண்ணன் மகன் ஜெயினுல் ஆப்தீன் ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். பிறகு அப்துல்கலாம் இல்லத்தில் உள்ள “மிஷன் ஆப் லைப்” கண்காட்சியை ஒரு மணிநேரம் பார்வையிட் டார். இன்று ராமேசுவரத்தில் அப்துல்கலாமின் உடலுக்கு வைகோ அஞ்சலி செலுத்து கிறார். 

த.மா.கா.  தலைவர் ஜி.கே.வாசன் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் உடலுக்கு இன்று நேரில் அஞ்சலி செலுத்துகிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்று அங்கிருந்து ராமேசுவரம் செல்கிறார்.பா.ம.க.  இளைஞர் அணி செயலாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று சென்னையில் இருந்து மதுரை சென்றார். அங்கிருந்து ராமேசுவரம் போய் அப்துல்கலாம் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறார்.

இந்திய தேசிய லீக் மாநில தலைவர் எம்.பஷீர்அகமது,  உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர்  வேட்டவலம் மணிகண்டன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா மண்டல தலைவர் சதக்கத்துல்லா மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகி கள் முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் ராமே சுவரத்தில்  குவிந்துள்ளனர்.


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்