தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்... இன்றே கடைசி நாள்!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்... இன்றே கடைசி நாள்!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்... இன்றே கடைசி நாள்!
 
வேட்புமனு தாக்கல்... இன்றே கடைசி நாள்!
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே அரசியல் கட்சிகள் சுயேட்சைகள் களத்தில் குதித்தனர். இந்நிலையில் வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் வேட்புமனு தாக்கல் வழக்கத்தை விட மந்தமாக நடைபெற்றது. எனினும் கடந்த 25-ம் தேதி நல்ல நாள் என்பதால் திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஏராளமானோர் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
 
ஒரே நாளில் மாநிலம் முழுவதும் உள்ள தேர்தல் அலுவலகங்கள் பரபரத்தது. இதுவரையில் மாநிலத்தில் 600-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார்கள். வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் ஆகும். வேட்பாளர் தேர்தல் ஏற்பட்ட தாமதம் காரணமாக, காங்கிரஸ் வேட்பாளர்கள் பலர் இன்று வேட்புமனு தாக்கல் செய்வார்கள்.

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்