தமிழ்நாட்டில் 1,085 வேட்புமனுக்கள் ஏற்பு; 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது!

தமிழ்நாட்டில் 1,085 வேட்புமனுக்கள் ஏற்பு; 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது!

தமிழ்நாட்டில் 1,085 வேட்புமனுக்கள் ஏற்பு; 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது!
 
தமிழ்நாட்டில் 1,085 வேட்புமனுக்கள் ஏற்பு!
 
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் ஒரேகட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி மாலை 3 மணியுடன் முடிந்தது. இந்நிலையில் நேற்று, தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் பரிசீலிக்க்ப்பட்டது. மொத்தமாக 1,403 வேட்பாளர்கள் 1,749 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதிகபட்சமாக, கரூரில் 73 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. வேட்புமனு பரிசீலனையில் பல்வேறு காரணங்களுக்காக 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.
 
அதன் அடிப்படியில் 1,085 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் பட்டியலின் படி, அதிகபட்சமாக கரூரில் 56 மனுக்களும், குறைந்தபட்சமாக நாகையில் 9 மனுக்களும் உள்ளன. இதற்கு மேலும் போட்டியிட விரும்பாதவர்கள் நாளை மாலைக்குள் வேட்புமனுவை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். அதன்படி இறுது வேட்பாளர் பட்டியல் வெளியாகும். சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னங்களும் அதன் பின்னர் ஒதுக்கப்படும்.!
 
விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலை பொருத்தவரையில் 22 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், 8 நிராகரிக்கப்பட்டு 14 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

ஒப்பான செய்திகள்...


விளம்பரம்