கரூர்: கருரை சுற்றியுள்ள பகுதியில் சூறாவளி

கரூர்: கருரை சுற்றியுள்ள பகுதியில் சூறாவளி

கரூர்: கரூர் சுற்றியுள்ள க.பரமத்தி ஒன்றியம், தோப்பம்பட்டி, ஒண்டியூர்,

சங்கம்கரை, துக்காச்சி உள்ளிட்ட 10 கிராமங்களில் நேற்று முந்தய தினம் (4.4.2015) நள்ளிரவு தீடீரென சூறாவளி காற்று வீசியதால் 40 வீடுகளில் மேற்கூரைகள் காற்றில் பறந்தது. ஓடு, கூரை, மற்றும் காரை அட்டைகளால் வெயபட்டிருந்த வீடுகள் பதிப்புகுள்ளாகின. மின் கம்பங்கள் சில அறுந்து விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கபட்டது. இதனால் இரவு முழுக்க மக்களின் உறக்கம் பாதிக்கப்பட்டது.

பதிக்கபட்ட பகுதிகளை ஆட்சியாளர் திருமதி ஜெயந்தி பார்வையிட்டு ஆறுதல் கூறினார். அவர்களுக்கு இழப்பிடாக, முழுவதும் பாதிக்கப்பட கூரை வீடுகளுக்கு 5000 ரூபாயும் மற்ற பாதிப்புகளுக்கு 2500 ரூபாயும் வழங்க ஏற்பாடு செய்தார். மேலும் ஓட்டு வீடுகளுள் காரை அட்டைகள் கொண்ட வீடுகளும் உள்ளதால் அவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசுக்கு கோரிக்கை அனுப்பி வைக்கப்படும் என்றார்.

 

செய்தியாளர் : சி. ஆனந்தகுமார், கரூர்


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்