7.25 லட்சம் வரை பரிசு - டி.ஜே நினைவு புகைப்படப் போட்டி, கோவை

7.25 லட்சம் வரை பரிசு - டி.ஜே நினைவு புகைப்படப் போட்டி, கோவை

2015 ஆம் ஆண்டிற்க்கான  டி.ஜே நினைவு புகைப்படப் போட்டி இந்த வருடம் தொடங்கி உள்ளது. கோவையை சேர்ந்த லட்சுமி ஆலை நிறுவனம் கடந்த 2012  முதல் புகைப்படப் போட்டிகள் நடத்தி வருகின்றனர்.

போட்டி என்னமோ கோவையில் தான் நடக்கிறது, எனினும் பரிசுகள் பெரும்பாலும் வடஇந்தியர்களே அதிகம் வென்றுள்ளனர். இந்த வருடம் நம்ம ஊர் மக்களும் பங்கு பெற வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்.

போட்டி இயற்கை என்னும் தலைப்பில் நடைபெறுகிறது. போட்டிக்கான புகைப்படங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த போட்டிக்கான விதிமுறைகள் http://www.djmpc.in என்ற இணைய தளத்தில் பர்ர்த்து தெரிந்துகொள்ளலாம். இந்த மாதம் மே 31 வரை மட்டுமே புகைப்படங்கள் பெற்றுக்கொள்ளப்படும்.

மேலே உள்ள படம் சென்ற வருடம் முதல் பரிசு வென்றது. 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்