கரூர் சின்னபனையூரில் மதுக்கடை மூடல் - காந்தியவாதி சசிபெருமாலுக்காக

கரூர் சின்னபனையூரில் மதுக்கடை மூடல் - காந்தியவாதி சசிபெருமாலுக்காக

காந்தியவாதி சசி பெருமாள் மதுவிலக்கு போராட்டத்தில் ஈடுபட்டு மரணமடைந்த நிலையில் சின்னப் பனையூரில் மதுபானக் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம், சின்னப்பனையூரில் பொதுமக்களுக்கு இடையூறாக அரசு மதுபானக் கடை செயல்பட்டு வந்தது. காந்தியவாதி சசி பெருமாள் மரணமடைந்த செய்தி அறிந்த பல்வேறு பொதுநல அமைப்பினர், சின்னப்பனையூர் இளைஞர் நற்பணி மன்றத்தினர்மற்றும் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மாலை ஒன்று திரண்டு சின்னப்பனையூர் அரசு மதுபானக் கடையை மூட வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

தகவலறிந்த குளித்தலை கோட்டாட்சியர் சக்திவேல், தோகைமலை காவல் நிலைய ஆய்வாளர் நெப்போலியன் உள்ளிட்டோர் பொதுமக்கள் முன்னிலையில் நடத்திய பேச்சுவார்த்தையில் அரசு மதுபானக் கடையை மூட கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.

சின்னபனையூர் மக்கள் சாதித்துவிட்டதற்கு வாழ்த்துக்கள் கூறுவோம்.... இறந்த சசிபெருமாலுக்கு மரியாதையை செய்வோம்


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்