போலி குடும்ப அட்டை குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

போலி குடும்ப அட்டை குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

போலி குடும்ப அட்டை குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

 

போலி குடும்ப அட்டைகளை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு திருமூர்த்தி என்பவர் ராணுவத்தில் உள்ள சகோதரர் பேரில் போலி குடும்ப அட்டை பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி சஞ்சய் கிஷன், மற்றும் சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் ஒருமுறை சோதனை செய்வதால் போலி குடும்ப அட்டைகளை தடுக்க முடியாது என்பதால் தொடர் ஆய்வு செய்து வருவதாக கூறினார். அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள் போலி குடும்ப அட்டைகளை ஒழிக்க எதுபோன்ற சோதனை நடைமுறையில் உள்ளது என்பதை அறிய விரும்புவதாக தெரிவித்தனர். அது தொடர்பான விவரங்களை 4 வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்