ஷூவில் கேமிராவை மறைத்து வைத்து பெண்களை ஆபாசமாக படம் பிடித்தவர் கைது

ஷூவில் கேமிராவை மறைத்து வைத்து பெண்களை ஆபாசமாக படம் பிடித்தவர் கைது

ஷூவில் கேமிராவை மறைத்து வைத்து பெண்களை ஆபாசமாக படம் பிடித்தவர் கைது

 

கடந்த சனிக்கிழமை டெல்லியில் உள்ள சாகத் டிஎல்எப் என்ற இடத்தில் உள்ள வணிக வளாகத்தில் வாலிபர் ஒருவர் ஒவ்வொரு பெண்களையும் பின் தொடர்ந்து செல்வதும் பின்னர் திரும்பி வருவதுமாக இருந்தார்.

இதை பார்த்து சந்தேகம் அடைந்த வணிக வளாக மேலாளர் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தார். ஆனால் அவர் அங்கிருந்து த்ப்பி செல்ல முயற்சி செய்தார் மேலாளர் பாதுகாவலர்கள் துணையுடன் அவரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.

வாலிபர் தனது வலது கால் ஷூவில் கேமிராவை மறைத்து வைத்து குட்டை பாவாடை அணிந்து வரும் பெண்கள் பின்னாடி சென்று ஆபாச படங்களை எடுத்தது தெரியவந்தது. அவர் நொய்டாவை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக உள்ளார் என்பதும் அவரது பெயர் ஆஷிஸ் சர்மா 9 (வயது 34 ) என்பதும் தெரியவந்தது. சர்மா பரிதாபாத்தை சேர்ந்தவர்.

ரகசிய கேமிராமூலம் எடுத்த இந்த வீடியோக்களை அவர் தனது மொபைல் போனிலும் சமூக வலைதளங்களிலும் பதிவு செய்து உள்ளார்.

அவரிடம் இருந்து ரகசிய கேமிராக்கலையும், 16 ஜிபி மெமரி கார்டையும் போலீசார் கைபற்றினர்.அதில் பல் ஆபாச வீடியோக்கள் இருந்து உள்ளன.

 


ஒப்பான செய்திகள்...


விளம்பரம்