வணக்கம் கரூர் - நமது வஞ்சி நகரின் குரல் | கரூர் நிகழ்வுகள் | கரூர் செய்திகள் | Vanakkam Karur | Karur News

குரல் வளம் உண்டாக்கும் வெற்றிலை..!

குரல் வளம் உண்டாக்கும் வெற்றிலை..!   இது இந்தியாவில் வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும், வளர்கிறது. இது ஒரு கொடி வகையைச் சேர்ந்தது. இதன் இலைகள் இதயவடிவில் மேலும் படிக்க »

மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது. மூட்டுத் தேய்மானம் இரண்டு வகைப்படும்: 1)மூட்டழற்சி(osteo arthritis):இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும். 2)முடக்குவாதம்(rheumatoid arthritis): இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள்,மணிக்கட்டு,கால் போன்ற பகுதிகளையே தாக்கும். அறிகுறிகள்: மூட்டழற்சி: நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும். முடக்குவாதம்: இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும். காரணம்:முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம். முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரண்மாகும். பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம். கைவைத்தியம்: 1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும். 2.ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். 3.இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். 4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும். 5.ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம். 6.இது ஒரு ஸ்பெயின் மருத்துவரின் குறிப்பு, மேலும் நல்ல பலனை தரும். இரண்டு மேஜைக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கோப்பை ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது. 7.ஒரு மேஜைக்கரண்டி பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும். உணவுப்பழக்கம்: * வாழைப்பழம் அதிகமாக உண்ண வேண்டும். காய்கறி சூப் அதிகமாக சாப்பிட வேண்டும். கேரட், பீட்ரூட் போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம். * கால்சியம் அதிகம் உள்ள பால்,பால் சார்ந்த பொருட்கள், முள் நிறைந்த மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும் தவிர்க்கவேண்டியவை: காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக்கவலைகள், மன அழுத்தம்.

மூட்டு வலி   மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் மேலும் படிக்க »

துளசி இலைகளில் மருத்துவ புரதங்கள் கண்டுபிடிப்பு: தமிழக மாணவர்கள் சாதனை

துளசி இலைகளில் மருத்துவ புரதங்கள் கண்டுபிடிப்பு: தமிழக மாணவர்கள் சாதனை   துளசி இலைகளில் மருத்துவம் மூலதாரமாக விளங்கும் புரதங்களை கண்டுபிடித்து தமிழக மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். மேலும் படிக்க »

சீனத்து நெல்லிக்கனி யின் மருத்துவப் பண்புகள்

சீனத்து நெல்லிக்கனி யின் மருத்துவப் பண்புகள்   கிவி பழம் உடல் நலத்திற்கு மிகவும்  நல்லது. மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. சிறப்பான உணவியல் தன்மை, மருத்துவப் பண்புகள் கொண்ட மேலும் படிக்க »

மலேரியாவை குணமாக்கும் கல்வாழை

மலேரியாவை குணமாக்கும் கல்வாழை   மலேரியாவை குணப்படுத்த கூடியதும், மஞ்சள் காமாலையை போக்கி கல்லீரலுக்கு பலம் கொடுக்கும் தன்மை கொண்டதும், புண்களை ஆற்றக் கூடியதும், பால்வினை நோய்களுக்கு மேலும் படிக்க »

மருத்துவ குணம் கொண்ட பால்

மருத்துவ குணம் கொண்ட பால்   பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை எல்லோருக்கும் ஏற்ற உணவாக பால் உள்ளது. பாலில் தாய்ப்பால், பசும் பால், எருமைப் மேலும் படிக்க »

டெல்லியில் நாள்தோறும் சராசரியாக ஐந்து குழந்தைகள் மாயம்

டெல்லியில் நாள்தோறும் சராசரியாக ஐந்து குழந்தைகள் மாயம்   டெல்லியில், கடந்த ஐந்து ஆண்டுகளில் நாள்தோறும் சராசரியாக ஐந்து குழந்தைகள் காணாமல் போவதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க »

நம் எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம் அவா்கள் பெறும் சலுகைகள்..!

நம் எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம் அவா்கள் பெறும் சலுகைகள்..!   கோவை வெள்ளலுாரைச் சேர்ந்த, டேனியல் ஏசுதாஸ் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கேட்டிருந்த தகவல்கள் மாதம் மேலும் படிக்க »

அறிவுத்திறனை அதிகரிக்கிறது ‘அந்த’ சிந்தனை! – ஆய்வு முடிவு !!

அறிவுத்திறனை அதிகரிக்கிறது ‘அந்த’ சிந்தனை! – ஆய்வு முடிவு !!   எதுவுமே அளவோட இருந்தால்தான் நல்லது என்று பெரியவயவர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இதற்குவிதிவிலக்காக செக்ஸ் மட்டும் மேலும் படிக்க »

ஷூவில் கேமிராவை மறைத்து வைத்து பெண்களை ஆபாசமாக படம் பிடித்தவர் கைது

ஷூவில் கேமிராவை மறைத்து வைத்து பெண்களை ஆபாசமாக படம் பிடித்தவர் கைது   கடந்த சனிக்கிழமை டெல்லியில் உள்ள சாகத் டிஎல்எப் என்ற இடத்தில் உள்ள வணிக மேலும் படிக்க »


விளம்பரம்